search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைகாசி விசாகத் திருவிழா"

    • வைகாசி விழாவையொட்டி மங்களகிரி விமானத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா நடந்தது.
    • தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னை:

    சென்னை வடபழனியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி விசாகத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    விசாகத் திருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான வைகாசி விழாவையொட்டி மங்கள கிரி விமானத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா நடந்தது.

    பின்னர் சூரிய பிரபை, சந்திர பிரபை புறப்பாடு, ஆட்டுக்கிடா வாகனத்தில் வள்ளி தெய்வ யானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா, நாக வாகனத்தில் சுப்பிரமணியர் வீதி உலா நடைபெற்றது. நேற்று முன்தினம் பஞ்சமூர்த்தி புறப்பாடும், நேற்று யானை புறப்பாடும் நடந்தது.

    இந்த நிலையில் பிரம் மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்றது.

    காலை 6 மணிக்கு மேல் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து இரவு ஒய்யாவி உற்சவமும், நாளை (திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு குதிரை வாகன புறப்பாடும் நடைபெறுகிறது. 21-ந்தேதி இரவு 7 மணிக்கு ஆண்டவர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    வைகாசி விசாகமான 22-ந்தேதி காலை 9 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சண்முகர் வீதி உலாவும், காலை 10 மணிக்கு தீர்த்த வாரி உற்சவமும், கலசாபி ஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம், மயில்வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது. இதைத் தொடர்ந்து கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் விழா நிறைவு பெறுகிறது.

    வருகிற 23-ந்தேதி இரவு விசேஷ புஷ்ப பல்லக்கு புறப்பாடு, சுப்பிரமணியர் வீதி உலா நடக்கிறது. அதன் பின்னர், வைகாசி விசாக பிரம்மோற்சவ விடையாற்றி கலை நிகழ்ச்சிகள், 24-ந்தேதி முதல் ஜூன் 2-ந்தேதி வரை நடை பெறுகிறது.

    இதையொட்டி தினமும் மாலையில் பரத நாட்டியம், இன்னிசை கச்சேரி, வீணை கச்சேரி, இசை செற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    • 12 மணி அளவில் சுவாமிக்கு பால்குடம் அபிஷேகம், அதை தொடர்ந்து சத்துரு சம்கார மகா ஹோமம், மகா அபிஷேகம், மகா தீபாரா தனை நடைபெற்றது.
    • விழாவையொட்டி லட்சார்ச்சனை, அபிஷேகம், மகாதீப ஆராதனை, தங்க மயில், தங்கரதம் புறப்பாடு, நிகழ்ச்சிகள் நடைபெற்றன

    கோபி, ஜூன். 2-

    கோபிசெட்டிபாளையம் பச்சைமலை சுப்பிரமணிய சாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த 30-ந் தேதி விநாயகர் பூஜையுடன் தொடங்கியது.

    விழாவையொட்டி லட்சார்ச்சனை, அபிஷேகம், மகாதீப ஆராதனை, தங்க மயில், தங்கரதம் புறப்பாடு, நிகழ்ச்சிகள் நடைபெற்றன

    முக்கிய நிகழ்ச்சியான வைகாசி விசாகத் திருவிழா இன்று 2-ந் தேதி நடை பெற்றது. இதையொட்டி சுப்பிரமணியருக்கு காலை 9 மணி முதல் 11 மணி வரை 108 லிட்டர் பால்ஊற்றி தாராபிஷேக நிகழ்ச்சி நடை பெற்றது.

    இதை தொடர்ந்து 12 மணி அளவில் சுவாமிக்கு பால்குடம் அபிஷேகம், அதை தொடர்ந்து சத்துரு சம்கார மகா ஹோமம், மகா அபிஷேகம், மகா தீபாரா தனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்க ப்பட்டது.

    இந்நிகழ்ச்சிகளில் கோபி செட்டிபாளையம், கரட்டூர், நாயக்கன் காடு, நல்ல கவுண்டன் பாளையம், கரட்டடிபா ளையம்,

    குன்ன த்தூர் கெட்டி செவியூர், கொளப்பலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.

    ×